- பரம முதல்வர்
- முதல் அமைச்சர்
- சென்னை உயர் நீதிமன்றம்
- குமார்குரு
- பிற்பகல்
- லா
- எல். ஏ சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்துள்ளது. ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தான் பேசியதற்கு குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி குமரகுரு அவதூறாக பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகி வெங்கடாசலம் அளித்த புகாரில் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன நிபந்தனை விதிப்பு appeared first on Dinakaran.